ஓசூர்:
காதுகேளாத வாய் பேசமுடியாத மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், காதுகேளாத வாய் பேசமுடியாத மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கள் மூன்று நாட்களாக நடைப்பெற்று வந்தது.
இதில் தமிழகத்தின் 13 மாவட்டங்களிலிருந்து 300 மாணவ மாணவியர் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்றனர்.
10,13,17 ஆகிய வயதுகளின் அடிப்படையில் தனித்தனியாக கோளப்போட்டிகள், ஓவியப்போட்டி, வண்ணம் வரைதல், செய்முறை போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு இறுதி நாளான இன்று டைட்டான் நிறுவனத்தின் உரிமையாளர் பாஸ்கர் பட் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
ஆர்வமுடன் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும், கலந்துகொண்டதற்காகவும் அவர் வாழ்த்தினார்.