ஓசூர் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை.. பொது மக்கள் பீதி.!

ஓசூர் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டிக்கொலை.. பொது மக்கள் பீதி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ரவுடியை 4 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் பிரபல ரவுடியாக மகேஷ் குமார் வலம் வந்துள்ளார். அப்போது மற்றொரு கோஷ்டிகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெங்களூருவிலிருந்து பாகலூருக்கு தலைமறைவாக இருப்பதற்கு சென்றுள்ளார். அப்போது அவர் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவர் மீது கத்தியால் சராமாரியாக வெட்டியுள்ளது.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இது தொடர்பாக ஓசூர் டிஎஸ்பி மீனாட்சி தலைமையில் பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் ரவுடியை மற்றொரு கும்பல் வெட்டியதை பார்த்த பொதுமக்கள் மிகவும் பயத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்