ஒசூரில் சாரல் மழை

ஒசூரில் சாரல் மழை

ஒசூர்:

ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாததால், ஓசூர் மாநகராட்சியில் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி உள்ளனர், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய இருப்பதால் லேசான மழை கனமழையாக அதிகரிக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்