ஒசூரில் மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்

ஒசூரில் மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்

ஒசூர்:

ஓசூர் அருகே, மர்மமான முறையில் உயிரிழந்தவரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த காமன்தொட்டியை கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்பவர் கடந்த மாதம் வனப்பகுதியில் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இவர், காமன்தொட்டி கிராமத்தில் பட்டியலின மக்களின் வழிபாட்டுத்தளம் இடிக்கப்பட்டதற்காக வழக்கு தொடர்ந்தபோது ஒருதரப்பினருக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் ராஜப்பா என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சூளகிரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனியினர் என 300க்கும் மேற்ப்பட்டோர் ராஜப்பா கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்