முதியவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை

முதியவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை

ஒசூர்:

ஓசூர் அருகே மர்ம நபர்கள் முதியவர் ஒருவரை கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த இராயக்கோட்டை அருகே உள்ளது எடவனஹள்ளி கிராமம், இந்த கிராமத்தை சேர்ந்த சாக்கப்பன் (65) என்பவர் கிராமத்தின் அருகில் தோட்ட வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

தேங்காய் வியாபாரியான இவர், லட்சக்கணக்கில் ஏலச்சீட்டு நடத்தி, பலருக்கும் இன்றுவரை பணம் வழங்காமல் வெளியில் செல்வதை தவிர்த்து 6 மாதகாலமாக வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சாக்கப்பாவின் மகன் வேணூ என்பவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட 8 பேர்க்கொண்ட முகமூடி அணிந்த கும்பல் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகை கேட்டதாகவும் இல்லை என்றுக்கூறிய சாக்கப்பாவை அவர்கள் கொண்டுவந்த கத்தியால் வெட்டி உள்ளனர்.

வெளியில் சென்ற சாக்கப்பாவின் மகன் வேணூ வந்த பிறகாக வீட்டின் பின்புற கதவு வழியாக மர்ம நபர்கள் தப்பியதாகவும், கண் பார்வையற்ற சாக்கப்பா மனைவியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர் உயிருக்கு போராடிய சாக்கப்பாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுக்குறித்து சம்பவ இடத்திற்கு வந்த இராயக்கோட்டை போலிசார் சாக்கப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்து, சாக்கப்பா ஏலச்சீட்டை வழங்காததால் கொல்லப்பட்டரா? அல்லது நகைக்களுக்காக கொல்லப்பட்டரா? என்கிற விசாரணை தொடங்கி 8 பேர்க்கொண்ட முகமூடி கும்பலுக்கு போலிசார் வலைவீசி உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்