திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

ஒசூர்:

ஒசூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுளள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி இமாம்பாடா பகுதியில் வசித்து வந்தவர் மன்சூர் அலி. இவர் பைனான்சியர் தொழிலை செய்து வருகிறார். திமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் துணை அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

இன்று மாலை வழக்கம் போல ஒசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்க்கொண்டபோது மர்மநபர்கள் 3 பேர் மன்சூர் அலியை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மன்சூர் அலி ஒசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே இவரை கொல்ல திட்டமிட்டதாகவும் அப்போது காயங்களுடன் தப்பியதாக சொல்லப்படுகிறது.

ஏதேனும் முன்விரோதம் காரணமாக மன்சூர் அலி கொல்லப்பட்டாரா? என்கிற கோணத்தில் ஒசூர் நகர போலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்