காருடன் எரிந்த டிரைவர்; திட்டமிட்ட கொலை

காருடன் எரிந்த டிரைவர்; திட்டமிட்ட கொலை

ஒசூர்:

ஓசூர் அருகே டிப்பர் லாரி – கார் மோதிக்கொண்ட சாலை விபத்தில் கார் தீப்பற்றி எரிந்து ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம் திட்டமிட்ட கொலையென போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு என்னுமிடத்தில் கடந்த நவம்பர் 11 அன்று டிப்பர்லாரி – கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த ஒருப்பெண் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், தீப்பற்றி எரிந்த காரில் எச்.செட்டிப்பள்ளியை சேர்ந்த ஓட்டுநர் முரளி என்பவர் உடல்கருகி உயிரிழந்தார்.

இந்த விபத்துக்குறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா தனிப்படை அமைத்து விசாரித்து வந்தநிலையில், டிப்பர்லாரி ஓட்டுநர் பிடிப்பட்டுள்ளார் அவரிடம் மேற்க்கொண்ட விசாரணையில், உறவினர்களுக்கு இடையே ஏற்ப்பட்ட தொழில்போட்டிக்காரணமாக மதுரை கூலிப்படையை வைத்து கொலை செய்யதிட்டமிட்டதாகவும், திட்டத்தின்படி காரின் மீது டிப்பர் லாரியால் மோதி, தீப்பற்றக்கூடிய இரசாயனத்தை காரின்மீது ஊற்றி சாலை விபத்தைப்போல சித்தரிக்க முயன்றபோது, காரினுள் இருந்த திட்டமிட்ட பெண் படு காயங்களுடன் மீட்கப்பட்டார், ஓட்டுநர் உடல்கருகி பலியானது தெரியவந்துள்ளது.

சாலை விபத்தை போல் காட்சியளித்த இச்சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், போலிசார் மதுரை கூலிப்படையை சேர்ந்த ஓட்டுநர் மகாராஜவிடம் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்