ஒசூர் ஒன்றியத்தில் ஏராளமானோர் வேட்புமனு

ஒசூர் ஒன்றியத்தில் ஏராளமானோர் வேட்புமனு

ஒசூர்:

ஒசூர் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26 சிற்றூராட்சி மற்றும் 16 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முதல்கட்ட டிசம்பர் 27 அன்று நடைப்பெற இருக்கிறது.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக 9 ம் தேதி முதல்16 ஆம் தேதி என மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக உள்ளாட்சி தேர்தலை நடத்த தடைவிதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், மூன்று நாட்களாக வேட்பு மனுவினை தாக்கல் செய்ய தயக்கம் காட்டிய வேட்பாளர்கள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இன்று 3 நாட்களை விட அதிகளவில் வேட்புமனுக்களை அளித்தனர்.

இதுவரை ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிற்றூராட்சி தலைவர் பதவிக்கு 26 வேட்புமனுக்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 16 மனுக்கள் என ஊராட்சி மன்ற உறுப்பினர்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவிக்கு இதுவரை நான்கு நாட்களில் 278 மனுக்கள் ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தோர் இதுவரை வேட்புமனு செய்யாத நிலையில் கடைசி நாட்களில் வேட்புமனுக்கள் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்