ஒசூர்:
ஒசூரில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை கண்காட்சி நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
ஒசூரில் உள்ள கே.ஏ.பி., திருமண மண்டபத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை கண்காட்சி நேற்று முதல் துவங்கியது. இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறும் எனவும், பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் டிராக்டர்கள் உள்ளிட்ட நவீன வேளான் கருவிகள், காய்கறி விதைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்ட பொதுமக்கள் மானிய விலையில் கிடைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்சென்றனர்.