ஹாங்காங்:
ஹாங்காங்கில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாங்காங்கின் ஒரு பகதியில் வெளியே கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை வீசியபோது, தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த குடியிருப்பாளர்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் செயல்பாடுகள் சட்டவிரோதமானது. அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஹாங்காங் போலீசார் அறிக்கை வெளியிட்டனர்.