தீவிரமடையும் போராட்டம்; உள்துறை அறிவுறுத்தல்

தீவிரமடையும் போராட்டம்; உள்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி:

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவையற்ற வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்