தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்பு

தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்பு

புதுடெல்லி:

டெல்லியில் ஜெஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு ஹிந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நாட்டிற்கு எதிரான செயல்கள் பல்கலைக்கழகத்தில் அதிகரித்துவிட்டதாகவம்,, சமூக விரோத செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்