சிறையில் மதமாற்றம்.. பாதிரியார் மீது புகார்.!

சிறையில் மதமாற்றம்.. பாதிரியார் மீது புகார்.!

கோபி :

கோபி மாவட்ட சிறையில் 5 பேர் கொண்ட பாதிரியார்கள் கிறிஸ்துவ புத்தகங்களை கைதிகளுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு துணை போன, அவர்களுடன் கூட்டு வைத்திருக்கும் சிறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய கோரியும், நீதி விசாரணைக்கு உத்தரவிட கோரியும், சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் இந்து அமைப்பினர் கொடுத்தனர்.

தமிழக இந்து மக்கள் கழகத்தை சேர்ந்த செல்வகுமார், இந்து அதிரடிப்படை நிறுவனர் தலைவர் ராஜகுரு தலைமையில் இந்து அதிரடிப்படை மாநில இளைஞரணி செயலாளர் சிம்பு முருகேசன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சார் ஆட்சியர் உடனடியாக சிறைத்துறை உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்று தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்