டெல்லி:
நாட்டில் ஒரே மொழியாக இந்தி இருந்தால், உலக அளவில் இந்தியாவை மிகவும் பிரபலபடுத்த முடியும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இந்தி தினத்தை முன்னிட்டு, அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியாவை பொறுத்தவரை வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடு.
ஒவ்வொரு மொழிக்கும், முக்கியத்துவம் இருக்கிறது.
ஆனால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் அவசியம். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
அப்போதுதான் உலக அளவில் இந்தியாவை பிரபல படுத்த முடியும். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.