மாலத்தீவு:
பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அரசு சார்பில், அந்நாட்டின் உயரிய விருதான ‘நிசான் இசுதீன்’ விருதை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மோடி பிரதமராக பதவியேற்றபின் முதல் வெளிநாடுபயணமாக மாலத்தீவு சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாலத்தீவில் நடந்த விழாவில், வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவு அளிக்கும் மிக உயரிய விருதான ‘நிசான் இசுதீன்’ விருதை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கினார்.
பிரதமர் மோடியும் இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை கிரிக்கெட் ரசிகரான மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மதுக்கு வழங்கினார்.