சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை வரும் 23ம் தேதியே நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடிகர்சங்க தேர்தலை நிறுத்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்க தேர்தலை ஏற்கனவே அறிவித்தபடி வரும் 23ம் தேதியே நடத்தலாம் எனவும், ஆனால், வாக்குகள் மட்டும் எண்ணக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பதிவான வாக்குகள் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.