சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்தி நடிகர் சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி உறுப்பினர் ஏழுமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.
நீக்கப்பட்ட உறுப்பினர்கள் போலியானவர்கள் என நீதிமன்றத்தில் நடிகர் சங்கம் சார்பில் வாதிட்டனர். அதற்கு நீதிபதி, நீக்கப்பட்ட உறுப்பினர்கள் போலியானவர்கள் என்றால், கடந்த தேர்தலில் அவர்கள் எவ்வாறு வாக்களித்தனர்? என கேள்வி எழுப்பினர்.
இதுசம்பந்தமாக பிற்பகலில் ஆவணங்களை தாக்கல் செய்ய நடிகர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.