சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு கொடுக்க கணிமொழிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமொழி வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விடுவிக்க கோரி தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில், நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில், தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்த சந்தானகுமார் மற்றும் எம்.பி. கனிமொழி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.