நீர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்!

நீர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்!

சென்னை:

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்தவித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுபாடு நிலவிவரும் நிலையில், தண்ணீர் தட்டுபாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து இன்று தமிழக அரச சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தமிழக அமைச்சர்கள் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த செய்தி வெறும் வதந்தி எனவும், சிலர் சுய விளம்பரத்திற்காக தண்ணீரை விநியோகித்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்