சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.ஷாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமாணி ராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிவரும் ஏ.பி.ஷாஹி பணியிடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.