தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை..!

சென்னை:

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாலச்சந்திரன், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதால், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழைக்கு பெய்யும்.
புதுச்சேரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்த பாலச்சந்திரன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்