சிட்னி:
ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததால், பல ஆண்டுகளாக நிரம்பாத வாரகம்ப அணை நிரம்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 3 ஆண்டாக வறட்சி நிலவிவரும் நிலையில், தற்போது சில நாட்களாக கன மழை பெய்த வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படும் வாரகம்ப அணை, பல ஆண்டுகளுக்குப்பின் தற்போது 62 சதவீதம் நிரம்பியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஸிதிரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அங் குள்ள செடி, கொடி, மரங்கள் அழிந்தன. இந்த கன மழையால் வனங்கள் புத்துயிர் பெற்றுள்ளதாக சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளனர்.