கேதார்நாத்:
உத்தரகண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பயணிகள் காயமடைந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் ஹெலிபேடில் புறப்பட்டபோது யுடி ஏர் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் காயமடைந்தனர்.
ஹெலிகாப்டரின் பின்புற பகுதி தரையில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 6 பயணிகளும் உயிருக்கு ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக உள்ளனர்.