பூடான்:
பூடான் நாட்டில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
பூடான் ராணுவமும் இந்திய ராணுவமும் சேர்ந்து இன்று மதியம் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரேன ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பூட்டான் மற்றும் இந்திய விமானியும் உயிரிழந்தனர். பூடானில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இந்த ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.