சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாகை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.