நீலகிரியில் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரியில் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கூடலூர்:
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கேரளாவில் பருவமழை தீவிரமடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் வால்பாறை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நீலகிரி மாவட்டம் குன்னூர், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்