7 மாவட்டங்களில் கனமழை

7 மாவட்டங்களில் கனமழை

சென்னை:

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்