சென்னையில் கன மழை.. பெண் உயிரிழப்பு

  • In Chennai
  • September 19, 2019
  • 195 Views
சென்னையில் கன மழை.. பெண் உயிரிழப்பு

சென்னை:
சென்னையில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மண்ணடி ஐயப்பசெட்டி தெருவை சேர்ந்தவர் ஜெரினாபானு. இவர் கோவில் நிலத்தில் வீடுகட்டி வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று இரவு தனது குழந்தைகள் மற்றும் தாயாருடன் ஜெரினாபானு படுத்து தூங்கி கொண்டிருந்தபோது கனமழை பெய்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் ஜெரினா பானு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்