சென்னை:
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்க வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர் 12ம் தேதி கனமழை பெய்யும் எனவும், இது 14ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படம் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.