புவனேஸ்வர்:
ஒடிசாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஓட்டுநருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கும், தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லாததற்கும் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில், வாகனத்தை 62,000 ரூபாய்க்கோ அல்லது 2000 ரூபாய்க்கோ வாங்கப்பட்டதா என்பது முக்கியமல்ல. சட்டத்தை மீறும் எந்தவொரு வாகனத்திற்கும் இது பொருந்தும் என தெரிவித்தார்.