ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை, மும்பை இண்டியன்ஸ் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில், சென்னை அணி வீரரான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ் மக்கள் மற்றும் சென்னை ரசிகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களது இல்லத்தில் ஒருவனைப்போல அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் இந்த பண்பு என்னை நெகிழ செய்தது.
மீண்டும் அடுத்த வருடமும் சென்னை அணியில் விளையாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலந்க விடைபெறுகிறேன் என டுவிட் செய்துள்ளார்.
தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்,எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல,அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது.மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளயாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன். pic.twitter.com/WcJxB6mkjl
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 13, 2019