அடிப்படை செலவுக்கு பணம் எடுக்க அனுமதி

  • In General
  • September 26, 2019
  • 188 Views
அடிப்படை செலவுக்கு பணம் எடுக்க அனுமதி

இஸ்லாமாபாத்:

தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சையத்தின் அடிப்படை செலவுக்கு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள பாகிஸ்தானின் கோரிக்கை¬யை ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஹபீஸ் சையது, இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஐநா சபையில் கொடுத்த அழுத்தத்தின்பேரில் ஹபீஸ் சையது சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானத்தின்படி பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கை தடை செய்துள்ளது.

இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் அரசு தரப்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதில் ஹபீஸ் சையத் மற்றும் அவரது குடும்பத்திற்கும் தேவையான அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட, வங்கி கணக்கில் உள்ள நிதியை எடுக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஐ.நா. தீவிரவாத எதிர்ப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. அடிப்படை செலவுகளுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள மட்டும் பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்