லாகூர்:
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சென்றபோது, பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு பிரிவினரால் ஹபீஸ் சையது கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.