திருப்பூர்:
திருப்பூரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது.
காங்கிரஸ், தி.மு.க. கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது. இது அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.
வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். மேலும், ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசுவதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.
எப்படியாவது தமிழகத்தில் சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு பேசி வருகிறார்.
இது உள்நோக்கம் கொண்ட பொய். பா.ரஞ்சித் இயக்கும் படங்களை பொதுமக்கள் யாரும் பார்க்காமல் புறக்கணித்து, அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.