மொசடா:
குஜராத்தில் இளம்பெண் ஒருவர் 190 செ.மீ., தலைமுடியை வளர்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம், ஆரவள்ளி மாவட்டத்தில் உள்ள மொசடாவை சேர்ந்த பெண் நிலான்சி படேல். இவர் 190 செ.மீ., நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு 170.5 சென்டி மீட்டர் நீளத்துக்கு தலைமுடியை வளர்த்து, டீன் ஏஜ் பெண்களில் அதிக நீளத்துக்கு தலைமுடியை வளர்த்தவர் என்ற சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.