மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கியால் சுட்டவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். தப்பியோடிய 5 பேர் வாலாந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.