4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

ஒசூர்:

ஓசூர் அருகே கார் எரித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தொழிலதிபர் ஆனந்த் பாபு மனைவியின் காரை விபத்துக்குள்ளாகி கூலிப்படை உதவியுடன் பெட்ரோல் குண்டு வீசி ஓட்டுனர் முரளி மற்றும் தீயில் ஆனந்த் பாபுவின் மனைவி நீலிமா இருவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர்.

எரிந்த கார் டிரைவர்.

 

கருகி உயிரிழந்த ஆனந்த் பாபுவின் மனைவி நீலிமா.

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,இன்று கொலை வழக்கில் தொடர்புடைய காமன்தொட்டியை சேர்ந்த ஆனந்தன் (40), மஞ்சுநாத் (32), குமுதேப்பள்ளியை சேர்ந்த ராமு (21), மற்றும் கோப்பசந்திரம் கிராமத்தை சேர்ந்த கோபால் (40) இவர்கள் நான்கு பேருக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பரிந்துரையின் பேரில் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டம் பாய்ந்த 4 பேரும் ஏற்கனவே சிறையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் ராமமூர்த்தி இன்று வரை தலைமறைவாக உள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்