கஞ்சா லாரி மீது துப்பாக்கிச்சூடு..! சினிமா பாணியில் மடக்கி பிடிப்பு!!

கஞ்சா லாரி மீது துப்பாக்கிச்சூடு..! சினிமா பாணியில் மடக்கி பிடிப்பு!!

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே கஞ்சா லாரியை துப்பாக்கிச்சூடு நடத்தி சினிமா பாணியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஆந்திர மாநிலத்திருந்து மதுரைக்கு போதைப் பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து, பெரம்பலூர் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை தனிப்படை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றதால், சந்தேகமடைந்த போலீசார் காரை வேகமாக விரட்டினர்.

காரை பின்பக்கமாக மோதியும் நிற்காததால் அந்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து துப்பாக்கி முனையில் காரை சுற்றி வளைத்த போலீசார் அதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் கமுதியை சேர்ந்த முனியசாமி மற்றும் அவரது நண்பர் முருகன் ஆகிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். சினிமா பாணியில் நடந்த இந்தசம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்