தேனி:
தேனியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் கௌரி மோகன்தாஸ் வீட்டில் துப்பாக்கி குவியல் சிக்கியதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கேரளாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மணி என்பவரை, போலீசார் தேடிச் சென்ற போது இந்த துப்பாக்கி குவியல் சிக்கியுள்ளது.
இந்த குவியலில், ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், மோகன்தாசிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
மோகன்தாஸ் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவரா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.