சென்னை:
சென்னை அருகே கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
முகேஷ் தனது நண்பனான விஜய் வீட்டுக்கு இன்று சென்றுள்ளார். வீட்டினுள் இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், விஜய்யின் அண்ணன் உதயா வீட்டுக்கு வெளியே இருந்துள்ளார்.
அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனே உள்ளே சென்று பார்த்த உதயா, முகேஷின் நெற்றியில் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உதயாவின் கூச்சல்போட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து முகேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாழம்பூர் போலீசார் தலைமறைவான விஜய்யை வலைவீசி தேடி வருகின்றனர்.