பாஜ.,க்கு எதிராக ஆர்ப்பாட்டம்.. குலாம் நபி ஆசாத் கைது.!

பாஜ.,க்கு எதிராக ஆர்ப்பாட்டம்.. குலாம் நபி ஆசாத் கைது.!

பெங்களூரு:

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து குமாரசாமி உடனடியாக விலக வேண்டும் என்று விதான சவுதா வளாகத்தில் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு போட்டியாக, கர்நாடக மாநில அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக பாஜகவை குற்றம்சாட்டி பெங்களூரு நகரில் கவர்னர் மாளிகை அருகே மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரசாரும், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் குலாம் நபி ஆசாத், கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, சித்தராமையா, மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு பாஜகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், குலாம் நபி ஆசாத், சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்