அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டிடத்தின் 5வது மற்றும் 6வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.