சென்னை:
டிஎன்பிஎஸ்சி.,யின் குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு துவங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தொடர்ந்து, விண்ணப்ப பதிவு ஆன்லைனில் துவங்கியுள்ளது.
காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது.
இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு இன்று முதல் துவங்கி பிப்ரவரி 19-ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.