கோவை:
கோவையில் மூதாட்டி ஒருவர் ரூ.1க்கு இட்லி வியாபாரம் செய்துவருவது தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் 82 வயது மூதாட்டி கமலாத்தாள். இவர் அந்த பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.
கமலாத்தாள் பாட்டி தன் கடையில் ரூ.1க்கு விற்பனை செய்வதால் ஏராளமானோர் அங்கு வந்து மலிவு விலை இட்லியை சாப்பிட்டு செல்கின்றனர்.
விறகு அடுப்பை வைத்து மிகவும் சிரமத்துடன் இட்லி கடை நடத்தி வரும் இந்த மூதாட்டியின் துயரத்தை சமூக வலைத்தளங்களில் பரவ, இவருக்கு சமையல் எரிவாயு இணைப்பை அரசு வழங்கியுள்ளது.
இதற்கு முன் விறகு அடுப்பில் கடை நடத்தி வந்த புகைப்படங்கள் மற்றும் தற்போது எரிவாயு அடுப்பின் மூலம் இட்லி சுடும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது.