சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு மாதத்திற்குள் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.