‘ஓபி’ அடிக்கும் ஊழியர்கள்; களையெடுக்கும் மோடி

‘ஓபி’ அடிக்கும் ஊழியர்கள்; களையெடுக்கும் மோடி

புதுடெல்லி:

ஒழுங்காக வேலை செய்யாமல் ஏமாற்றும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பணியிலிருந்து விடுவிக்க மத்திய அரசு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.

மத்திய அரசின் பெரும்பாலான துறைகளில், சரியாக பணியாற்றாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை லஞ்சம் வாங்குபவர்கள் என சல்லடை போட்டு கண்டறிந்து வருகிறது மத்திய அரசு அவர்களுக்கு, கட்டாயமாக பணியிலிருந்து ஓய்வு அளிக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது.

இந்த விஷயத்தில், ரயில்வே துறையும், தன் அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளது.
ரயில்வே அமைச்சகம் சார்பில் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் தங்கள் மண்டலங்களில், 55 வயதை கடந்த மற்றும் 30 ஆண்டு பணி செய்து முடித்தவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது.

இவர்களது பணிப் பதிவேடு பற்றிய அனைத்து விபரங்களையும் அனுப்பும்படி, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் பட்டியல்கள் கிடைத்ததும், அதில், சரியாக பணியாற்றாதவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் அனைத்தையும், ஆகஸ்ட், 9ம் தேதிக்குள் அனுப்பும்படி மண்டல அலுவலகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்