சென்னை:
இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என கோமதி மாரிமுத்துவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஆசிய தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து, ஊக்க மருந்து சாப்பிட்டதால் தோல்வியடைந்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்தியால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய தடகள கூட்டமைப்பிடம் இருந்து எந்தவித தகவல்களும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.