மதுரை:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி எம்எல்ஏ சரவணன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.
கருணாநிதி பிறந்தநாளையொட்டி திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திமுக சார்பாக அந்த தொகுதி எம்எல்ஏ., சரவணன் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சரவணன், கடந்த 3 வருடமாக தங்க தேர் இழுப்பது நடைபெறாமல் இருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக அவர் தெரிவித்தார்.