சென்னை:
சென்னை விமானநிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை ஆணையாளர் கூறுகையில், கோலாலம்பூரிலிருந்து வந்த சென்னையைச் சேர்ந்த 51 வயதான அப்துல் அஜீஸ் என்பவர், தங்கத்தை எடுத்துவருவதாக சந்தேகத்தின் பேரில் விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவரது வசம் இருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள 290 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.