சென்னை:
சூட்கேஸ் சக்கரத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தியவர் சென்னை விமானநிலையத்தல் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் கூறுகையில், பயணி ஒருவர் பாங்காக்கிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கினார்.
அப்போது வெளியே செல்வதற்கான பகுதியில் சோதனையிட்டபோது, அவருடைய சூட்கேசின் சக்கரத்தில் ரூ.18.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.